India
முகேஷ் அம்பானிக்கு 3 முறை கொலைமிரட்டல் : சிக்கிய 19 வயது இளைஞர் - தட்டி தூக்கிய போலிஸார் !
உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் முதல் பணக்காரராகவும் இருந்து வருபவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் பெட்ரோல் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்புத்துறை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி தர வேண்டும், அப்படி தர மறுத்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பின்னர், அக்டோபர் 28ம் தேதி ரூ.200 கோடி தரவேண்டும் என அதே பாணியில் மீண்டும் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 31ம் தேதி தொகையை பல மடங்கு அதிகப்படுத்தி ரூ.400 கோடி கொடுக்கவேண்டும் என இமெயில் வந்துள்ளது.
இது குறித்த விசாரணையில், இந்த மூன்று இமெயில்களும் ஷதாப் கான் என்ற ஒரே பெயர் கொண்ட ஐடியிலிருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அந்த ஐடிக்கு சொந்தமான நபர் யார் என விசாரணை நடத்தியதில், தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயதான கணேஷ் ரமேஷ் வன்பார்தி என்ற இளைஞர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, தெலங்கானா விரைந்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி உத்தரவின் பேரில் நவம்பர் 8 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!