India
துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் காவலர் கொலை : ஹோட்டல் அறையில் கணவர் வெறிச்செயல் - பிகாரில் அதிர்ச்சி !
பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் கஜேந்திர யாதவ். இவருக்கு ஷோபா குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். கஜேந்திர யாதவ் கடந்த அக்டோபர் 19ம் தேதி அன்று ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து சென்றுள்ளார்.
அடுத்த நாள் காலை அவரின் மனைவி ஷோபா குமாரியும் அதே அறைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கஜேந்திர யாதவ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியின் தலையில் சுட்டுள்ளார்.
இதில், அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு, கஜேந்திர யாதவ் கீழே ஹோட்டல் ஊழியரிடம் சென்று உணவு வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
ஆனால், சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அவரின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கே ஷோபா குமாரி உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் காணாமல் போன கஜேந்திர யாதவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!