India
BMW கார் கண்ணாடியை உடைத்து ரூ.14 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர் : கர்நாடகாவில் பகீர்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.14 லட்சத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், BMW கார் அருகே முகமூடி அணிந்த ஒருவர் நின்று கொண்டி இருக்கிறோர். அதேபோல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் உள்ளார். அப்போது நின்றுகொண்டிருந்த நபர் திடீரென கார் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக உள்ளே சென்று இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்.
பிறகு அங்குத் தயாராக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் எடுத்து என்ற பையில் ரூ.14 லட்சம் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!