India
”மோடி அரசின் உண்மை முகத்தை ஊடகங்கள் மூடி மறைப்பது ஏன்?”: கேள்வி எழுப்பும் சுப்ரியா ஷிரினேட்!
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஒருநாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றார். அப்போது ரூ.4,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் அங்குப் புனிதமான ஜோலிங்காங் மலையின் முன்பாக பாரம்பரிய வெள்ளை நிற உடைகளை அணிந்து கொண்டு தியானம் செய்தார்.
அன்றைய தினமே, பா.ஜ.க அரசு கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை விதித்தது. இந்த வரி விதிப்பிதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே x சமூகவலைதளப் பதிவில், இன்று நீங்கள் உத்தராகண்டில் இருப்பது நல்லது. உங்கள் அரசு கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளது. இது வீட்டிலிருந்து கங்கை நீரை வாங்குபவர்களுக்கு என்ன சுமையாக இருக்கும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை.
சாமானிய மக்களைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காத பா.ஜ.க அரசின் பாசாங்குத்தனத்தின் உச்சம் இது." என விமர்சித்துள்ளார். இதையடுத்து கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை பா.ஜ.க அரசு ரத்து செய்தது.
இது குறித்து பெரிதாக ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மோடி அரசின் முகத்தை ஊடகங்கள் மறைப்பதா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கூறிய சுப்ரியா ஷிரினேட், “மோடி அரசு கங்கை நீருக்கு 18% வரி விதித்ததை ஆவணங்களுடன் நாங்கள் அம்பலப்படுத்தியபோது, அந்த வரியை நீக்கிவிட்டனர். ஊடகங்கள் அம்பலப்படுத்த வேண்டிய பொய்களை நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம். மோடி அரசாங்கத்தின் உண்மை முகத்தை ஊடகங்கள் மறைப்பது வருத்தமளிக்கிறது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!