India
7 மாத குழந்தையின் காலை கடித்த சிறுத்தை.. துணிச்சலுடன் மீட்ட தாய் - பாசப் போராட்டம்!
மகாராஷ்டிர மாநிலம் ஜூன்னர் வனப்பகுதி அருகே உள்ள டேல் என்ற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் கார்கல். இவர்கள் குடும்பத்தின் ஆடுகளை வளர்த்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது7 மாத குழந்தையுடன் தாய் கார்கல் ஆடுகள் பட்டியில் அடைத்துவிட்டு அங்கேயே தூங்கியுள்ளார். பின்னர் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
பிறகு கண்விழித்துப் பார்த்தபோது சிறுத்தை ஒன்று குழந்தையின் காலை கடித்து காட்டுக்குள் இழுக்கப் பார்த்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த கட்டை, கற்களை எடுத்து சிறுத்தை மீது வீசியுள்ளார்.
பின்னர் சிறுத்தை குழந்தையை விட்டு விட்டு, காட்டிற்குள் ஓடிவிட்டது. இதையடுத்து காயத்துடன் இருந்த குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இது பற்றி அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கக் கிராமத்தைச் சுற்றிலும் கூண்டு வைத்துள்ளனர்.
Also Read
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!