India
7 மாத குழந்தையின் காலை கடித்த சிறுத்தை.. துணிச்சலுடன் மீட்ட தாய் - பாசப் போராட்டம்!
மகாராஷ்டிர மாநிலம் ஜூன்னர் வனப்பகுதி அருகே உள்ள டேல் என்ற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் கார்கல். இவர்கள் குடும்பத்தின் ஆடுகளை வளர்த்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது7 மாத குழந்தையுடன் தாய் கார்கல் ஆடுகள் பட்டியில் அடைத்துவிட்டு அங்கேயே தூங்கியுள்ளார். பின்னர் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
பிறகு கண்விழித்துப் பார்த்தபோது சிறுத்தை ஒன்று குழந்தையின் காலை கடித்து காட்டுக்குள் இழுக்கப் பார்த்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த கட்டை, கற்களை எடுத்து சிறுத்தை மீது வீசியுள்ளார்.
பின்னர் சிறுத்தை குழந்தையை விட்டு விட்டு, காட்டிற்குள் ஓடிவிட்டது. இதையடுத்து காயத்துடன் இருந்த குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இது பற்றி அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கக் கிராமத்தைச் சுற்றிலும் கூண்டு வைத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!