India
”40 குண்டுகள் உன் உடலில் பாயும்”: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்- உ.பியில் பகீர்
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் சுமித் சிங். ஆசிரியரான இவரிடம் மாணவர்கள் பயிற்சி வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது ஊரைச் சேர்ந்த ஒரு மாணவரும் இப்பயிற்சி வகுப்பில் படித்து வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவர் மாணவியிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சகோதரனை அழைத்து வந்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அந்த மாணவனும் பயிற்சி வகுப்பு முடித்து விட்டு வெளியே சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அம்மாணவரும் அவரது சகோதரரும் மீண்டும் பயிற்சி மையத்திற்கு வந்து ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்து வந்த துப்பாக்கியை வெளியே எடுத்து ஆசிரியரை சுட்டுள்ளனர்.இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், "6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். 40 குண்டுகளை உன் உடலில் பாய்ச்சுவேன். இன்றும் 39 குண்டுகள் உள்ளது" என அவர்கள் மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?