India
’டீ விருந்துக்கு அழையுங்கள்’.. பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்திய பா.ஜ.க தலைவர் : வலுக்கும் கண்டனங்கள்!
மகாராஷ்டிர பா.ஜ.க தலைவராக இருப்பவர் சந்திரசேகர் பவான்குலே. இவர் அகமத்நகரில் நடைபெற்ற பா.ஜ.க தொகுதி பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய சந்திரசேகர் பவான்குலே, "பத்திரிகையாளர்கள் ஒரு சிறிய சம்பவத்தை ஏதோ குண்டுவெடிப்பு நடந்தது போல காட்டுகிறார்கள். இதுபோன்று தொல்லைகளை உருவாக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அவர்களை டீ விருந்துக்கு அழைத்து, எங்களுக்கு எதிராக எதையும் எழுதக்கூடாது என கூறுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
மேலும் அவர்களை தாபாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நன்றாக அவர்களை நடத்துங்கள். எங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாராட்டு செய்திகள் மட்டுமே இருக்க வேண்டும். மோடி அரசாங்கத்தின் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என வலியுறுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே பேச்சுக்குப் பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், "எல்லாப் பத்திரிகையாளர்களும் விற்றுத்தீர்ந்துவிடவில்லை. பா.ஜ.க தலைவரின் பேச்சு ஊடக சுதந்திரத்தை அவமதிக்கிறது" என தெரிவித்துள்ளார்
Also Read
-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு ரூ.1 லட்சம் ஓய்வு ஊதியம் : பெரியார் பல்கலை. உத்தரவால் சர்ச்சை!
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?