India
’டீ விருந்துக்கு அழையுங்கள்’.. பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்திய பா.ஜ.க தலைவர் : வலுக்கும் கண்டனங்கள்!
மகாராஷ்டிர பா.ஜ.க தலைவராக இருப்பவர் சந்திரசேகர் பவான்குலே. இவர் அகமத்நகரில் நடைபெற்ற பா.ஜ.க தொகுதி பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய சந்திரசேகர் பவான்குலே, "பத்திரிகையாளர்கள் ஒரு சிறிய சம்பவத்தை ஏதோ குண்டுவெடிப்பு நடந்தது போல காட்டுகிறார்கள். இதுபோன்று தொல்லைகளை உருவாக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அவர்களை டீ விருந்துக்கு அழைத்து, எங்களுக்கு எதிராக எதையும் எழுதக்கூடாது என கூறுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
மேலும் அவர்களை தாபாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நன்றாக அவர்களை நடத்துங்கள். எங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாராட்டு செய்திகள் மட்டுமே இருக்க வேண்டும். மோடி அரசாங்கத்தின் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என வலியுறுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே பேச்சுக்குப் பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், "எல்லாப் பத்திரிகையாளர்களும் விற்றுத்தீர்ந்துவிடவில்லை. பா.ஜ.க தலைவரின் பேச்சு ஊடக சுதந்திரத்தை அவமதிக்கிறது" என தெரிவித்துள்ளார்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!