India
டெல்லி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தெருநாய்.. வீடியோவால் சிக்கிய தொண்டு நிறுவன பொதுச்செயலாளர் !
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது டெல்லியில், ஒருவர் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் 'நிஸ்கம் சேவா சமிதி' என்ற தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் பொதுச்செயலாளராக பவன் மல்ஹோத்ரா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தெருநாய்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது குறித்து அவரின் வீட்டாரிடம் சிலர் புகார் அளித்த நிலையிலும், அவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த சூழலில் அவர் ஒரு தெருநாயை வன்கொடுமை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், தொண்டு நிறுவனம் ஒன்றின் பொதுச்செயலாளர் என்பதால் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.
எனினும் இந்த விவகாரம் உயரதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், பவன் மல்ஹோத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!