India
டெல்லி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தெருநாய்.. வீடியோவால் சிக்கிய தொண்டு நிறுவன பொதுச்செயலாளர் !
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் எருமையை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது டெல்லியில், ஒருவர் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் 'நிஸ்கம் சேவா சமிதி' என்ற தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் பொதுச்செயலாளராக பவன் மல்ஹோத்ரா என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தெருநாய்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது குறித்து அவரின் வீட்டாரிடம் சிலர் புகார் அளித்த நிலையிலும், அவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த சூழலில் அவர் ஒரு தெருநாயை வன்கொடுமை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், தொண்டு நிறுவனம் ஒன்றின் பொதுச்செயலாளர் என்பதால் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.
எனினும் இந்த விவகாரம் உயரதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், பவன் மல்ஹோத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?