India
பூட்டிய வீட்டுக்குள் பல மாதங்களாக அடைந்து கிடந்த தாய், சிறுவன், நாய்கள்.. புதுவையில் அதிர்ச்சி !
புதுச்சேரி, ரெயின்போ நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் சசிகலா. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தனது கணவரை பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார். அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த இவரது வீட்டில் நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். மகன், செல்ல பிராணிகள், வேலை என்று வாழ்ந்து வந்த சசிகலா, கடந்த பல மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
சசிகலாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லாமல் இருந்து வந்துள்ளார் எனவே தனது வீட்டினுள்ளே மகன் மற்றும் செல்ல பிராணிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் இவரது வீட்டில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து வந்துள்ளனர். அந்த வகையில் சம்பவத்தன்று அந்த வீட்டில் இருந்து அதிகப்படியான துர்நாற்றம் வந்துள்ளது.
இதனால் அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பூட்டிய வீட்டின் கதவை திறந்து உள்ளே இருந்த செல்லப்பிராணிகள், சசிகலா, அவரது 6 வயது மகன் ஆகியோரை மீட்டனர். தொடர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்ட 6 நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு கொண்டு சென்றனர்.
மேலும் மீட்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது மகனை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து விசாரிக்கையில், சசிகலா தனது வீட்டில் அவர்கள் சாப்பிட்ட மற்றும் பயன்படுத்திய குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கியும் நாய்கள் மற்றும் மனித மலங்களுக்கு நடுவே துர்நாற்றம் வீசிய நிலையிலும் ஓராண்டுகளாக வசித்து வந்தது தெரியவந்தது.
அதோடு அவர்கள் உணவுக்காக ஆன்லைன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வந்ததும், மின்சார கட்டணத்தை கூட ஆன்லைன் மூலமே செலுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!