India
திட்டிய ஆசிரியர்கள்.. பள்ளியின் 6வது மாடியில் இருந்து குதித்த 10ம் வகுப்பு மாணவன்: அதிர்ச்சி சம்பவம்!
மேற்குவங்க மாநிலம் கஸ்பா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் ஷேக் ஷான். இவர் சம்பவத்தன்று பள்ளியின் 6 வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
பிறகு பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து சென்றுன்றனர். அங்கு மாணவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து மாணவனின் பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. மகன் இறப்புச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், பள்ளியில் கொடுக்கப்பட்ட ப்ராஜெட் வேலையை ஷேக் ஷான் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆசிரியர் அவரை திட்டியுள்ளார். மேலும் சக மாணவர்கள் முன்பு அவரை கிண்டல் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த ஷேக் ஷான் பள்ளியின் 6வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் மேலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மோடியும், யோகியும் : சர்வாதிகாரத்திற்கு வித்திடும் இரு பெரும் சர்வாதிகாரிகள்!
-
முதலீட்டாளர்களை விட அதிக வருமானம் ஈட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு : கேள்விகளால் திக்குமுக்காடிய நிதியமைச்சர்!
-
இந்தியாவிலேயே முதல்முறை 1,761 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி : சென்னையில் சீர்மிகு பாராட்டு விழா!
-
“ஏழைகளுக்கு எது கொடுத்தாலும் வயிறு எரிகிறது” - பேருந்து திட்டம் குறித்து பேசிய மோடிக்கு CPI(M) கண்டனம்!
-
FACT CHECK: 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.. போலி செய்திக்கு தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்!