India
விவசாய நிலத்தை நாசம் செய்த பன்றிகள்.. உரிமையாளர் குடும்பம் அடித்து கொலை: 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அடுத்த ஓர்மன்ஜி பகுதியில் விவசாய பண்ணை உள்ளது. அதன் இருகிலேயே விவசாய குடும்பம் ஒன்று பன்றிகளை வளர்த்து வருகிறது. இப்பன்றிகள் அடிக்கடி விவசாய பண்ணைக்குள் சென்று நிலங்களை நாசம் செய்து வந்துள்ளது.
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பன்றிகள் பண்ணைக்குள் சென்றுள்ளது. இதைபார்த்து அங்கிருந்தவர்கள் ஆவேசமடைந்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் விரைந்து வந்து உயிரிழந்தவர்கள் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஜனேஸ்வர் பேடியா, சரிதா தேவி மற்றும் சஞ்சு தேவி ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு உள்ளது. இதில் ஆறு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Also Read
-
மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட விவசாயிகள்... மோடி கையாண்ட உத்தி என்ன?
-
மிரட்டலா? அல்லது பதவி ஆசையா? : பா.ஜ.க.விற்கு இழுக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!
-
“ஸ்மிருதி இராணிக்கு வாக்களிக்கக்கூடாது...” - அமேதியில் கூட்டாக சேர்ந்து உறுதி மொழி எடுத்த சமூகத்தினர் !
-
தோல்வி பயத்தால் நீதிமன்றத்தில் பின் வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : விடுவிக்கப்படும் ஊடகவியலாளர்கள்!
-
“மோடிக்கு சமைத்துக்கொடுக்க நான் தயார்...” - உணவு அரசியலுக்கு குட்டு வைத்த மம்தா பானர்ஜி !