India
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அருவி அருகே Reels.. பாறை மேல் நின்ற இளைஞருக்கு நேர்ந்த கதி.. - VIDEO வைரல்!
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலை சார்ந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சூழலில் இளைஞர் ஒருவர் அருவி அருகே நின்று ரீல்ஸ் செய்யும்போது வழுக்கி விழுந்து நீர் அடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியை அடுத்துள்ளது பத்ராவதி. இங்கு சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் தனது நண்பர்களுடன் ஊர் சுற்ற சென்றுள்ளார். அப்போது உடுப்பி மாவட்டம் குந்தாபூர் அருகே உள்ள அரசினகுடி அருவியில் நீரை கண்டு ரசித்துள்ளார். மேலும் வெள்ளம் கரைபுரண்டும் சூழலில் அங்கிருக்கும் பாறையில் நின்று அழகை ரசித்தவாறே, ரீல்ஸ் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் பாறையில் வழுக்கவே, கால் இடறி வெள்ளத்தில் விழுந்து வெள்ள நீரில் விழுந்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், நீருக்குள் வழுக்கி விழுந்த இளைஞர் சரத்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் அருவி அருகே பாறையின் மேல் ஏறி ரீல்ஸ் செய்ய முயன்றபோது, இளைஞர் வழுக்கி விழுந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் இளம் வயதுடையவர்களுக்கு இதுபோன்ற ரீல்ஸ் மோகம் விட்டபாடில்லை. தொடர்ந்து இது போல் விபரீத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!