India
மாயமில்லை.. மந்திரமில்லை.. கேரள வெள்ளத்தில் குடையை வைத்து மீன்கள் பிடித்த இளைஞர்.. இணையத்தில் வைரல் !
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இந்த முறை தாமதமாக தொடங்கிய மழையால் கேரள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கேரளா ஒரு மலை பிரதேசம் மிகுந்த இடம். எனவே அங்கு மழை நீர் பல பகுதிகளில் தேங்கி இருப்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கிருக்கும் சில பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு சில இடங்களில் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் இந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பல அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கவும் அம்மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் இளைஞர்கள் சிலர் தடுப்பு பகுதியில் குடைகளை வைத்து மீன் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள கொட்டாரக்கரா பகுதியில் அமைந்திருக்கும் நீர் தடுப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் தூண்டில், வலை என்று எதுவும் இல்லமால், தாங்கள் கொண்டு வந்த குடை மூலம் மீன் பிடித்துள்ளனர்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த குடையை விரித்து ஓடும் தண்ணீருக்கு நடுவே வைக்கிறார். அப்போது அந்த நீரில் துள்ளும் மீன், அந்த குடையில் மாட்டிய பிறகு அதனை அருகில் இருக்கும் சாக்கில் போடுகிறார். இது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Also Read
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!