India
டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. துண்டு துண்டாக பிளாஸ்டிக் பைகளில் இருந்த பெண்ணின் உடல்!
டெல்லியில் கீதா காலனி அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பைகளில் மனித உடல் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலிஸார் சடலத்தை ஆய்வு செய்தனர். இதில் துண்டு துண்டாக வெட்டப்பட்டது பெண்ணின் உடல் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பிளாஸ்டிக் பைகளில் இருந்த உடல் பாகங்களை போலிஸார் கைப்பற்றி தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பெண்ணை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் அடைந்து பாலத்தில் வீசி இருக்கலாம் என போலிஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொலை உடல் பாகங்களைப் பல இடங்களில் வீசிய சம்பவம் நடந்தது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது டெல்லி மக்களைப் பீதியடைய வைத்துள்ளது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!