India
டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. துண்டு துண்டாக பிளாஸ்டிக் பைகளில் இருந்த பெண்ணின் உடல்!
டெல்லியில் கீதா காலனி அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பைகளில் மனித உடல் இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலிஸார் சடலத்தை ஆய்வு செய்தனர். இதில் துண்டு துண்டாக வெட்டப்பட்டது பெண்ணின் உடல் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பிளாஸ்டிக் பைகளில் இருந்த உடல் பாகங்களை போலிஸார் கைப்பற்றி தடவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பெண்ணை கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் அடைந்து பாலத்தில் வீசி இருக்கலாம் என போலிஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொலை உடல் பாகங்களைப் பல இடங்களில் வீசிய சம்பவம் நடந்தது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது டெல்லி மக்களைப் பீதியடைய வைத்துள்ளது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!