India
தொடரும் தெரு நாய்கள் வெறிச்செயல்.. ஒரே நாளில் 4 பேருக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெரு நாய்கள், சிறுவன் ஒருவரை துரத்தி கடித்து குதறும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த மாதம் கூட கோழிக்கோடு பகுதியில் கூத்தளி பஞ்சாயத்து ஒன்றில் சிறுமி ஒருவரை தெரு நாய் ஒன்று துரத்தி தாக்கியதில், சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாய் துரத்துவதை கண்ட அக்கம்பக்கத்தினர், கல்லை எடுத்து விரட்டவே அந்த நாய் அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நாயை பிடிக்க அந்த கிராம மக்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.
இந்த சூழலில் குழந்தைகள் வெளியே செல்வது ஆபத்து என்பதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அதாவது கூத்தளி பகுதியில் உள்ள 17 அங்கன்வாடி பள்ளிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (10.07.2023) அன்று பள்ளிகள் தாமாகவே முன்வந்து விடுமுறை அளித்தது. இருப்பினும் தொல்லை கொடுத்து வந்த நாய் இன்னமும் பிடிபடவில்லை.
இந்த நாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகரிப்புக்கு அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. இருப்பினும் அது முழுமையாக ஓய்ந்தபாடில்லை. கடந்த ஆண்டும் கூட, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் விரட்டுவதால், முதியவர் ஒருவர் துப்பாக்கி பாதுகாப்புடன் மாணவர்களை பள்ளிக்கு கூட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!