India
தொடரும் தெரு நாய்கள் வெறிச்செயல்.. ஒரே நாளில் 4 பேருக்கு நேர்ந்த சோகம்.. கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெரு நாய்கள், சிறுவன் ஒருவரை துரத்தி கடித்து குதறும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த மாதம் கூட கோழிக்கோடு பகுதியில் கூத்தளி பஞ்சாயத்து ஒன்றில் சிறுமி ஒருவரை தெரு நாய் ஒன்று துரத்தி தாக்கியதில், சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாய் துரத்துவதை கண்ட அக்கம்பக்கத்தினர், கல்லை எடுத்து விரட்டவே அந்த நாய் அங்கிருந்து ஓடியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நாயை பிடிக்க அந்த கிராம மக்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.
இந்த சூழலில் குழந்தைகள் வெளியே செல்வது ஆபத்து என்பதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அதாவது கூத்தளி பகுதியில் உள்ள 17 அங்கன்வாடி பள்ளிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (10.07.2023) அன்று பள்ளிகள் தாமாகவே முன்வந்து விடுமுறை அளித்தது. இருப்பினும் தொல்லை கொடுத்து வந்த நாய் இன்னமும் பிடிபடவில்லை.
இந்த நாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகரிப்புக்கு அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. இருப்பினும் அது முழுமையாக ஓய்ந்தபாடில்லை. கடந்த ஆண்டும் கூட, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் விரட்டுவதால், முதியவர் ஒருவர் துப்பாக்கி பாதுகாப்புடன் மாணவர்களை பள்ளிக்கு கூட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!