India
கணவன் காணாமல் போன மறுநாள் மாயமான மனைவி, 2 பிள்ளைகள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி ! - நடந்தது என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி என்ற பகுதியை அடுத்துள்ளது விசாப்பூர் என்ற இடம் உள்ளது. இங்கு பரத் பாலேகர் - சுகந்தா பாலேகர் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா, ஸ்ரீ என்ற 2 ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், பரத் பாலேகர் அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார்; பிள்ளைகளும் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 2-ம் தேதி பரத் பாலேகர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. பரத் பாலேகருக்கு இப்படி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் பழக்கம் இருந்துள்ளது. அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. வழக்கமாக சென்று விட்டு வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணத்தில் அவரது மனைவியும் பெரிதாக அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து மறுநாள் ஜூலை 3-ம் தேதி சுகந்தா பாலேகர், தனது 2 பிள்ளைகளையும் பள்ளியில் கொண்டு போய் விட்டுள்ளார். பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. மேலும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் பிள்ளைகளும் வீடு திரும்பவில்லை. இதனால் யாரேனும் குழந்தைகளை கடத்தி விட்டனரோ என்று உறவினர்கள் பயந்துபோனர்.
தொடர்ந்து இதுகுறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்தே கணவர் காணாமல் போன மறுநாள் மனைவி காணாமல் போனதும், அன்று மாலை நேரத்தில் பிள்ளைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன குடும்பத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்