India

காதல் கணவருக்கு வேறொருவருடன் காதல்.. 3 வயதில் மகன் உள்ள நிலையில் FB லைவில் தூக்கில் தொங்கிய இளம்பெண் !

தெலங்கானா மாநிலம் ஐதாரபாத் நகரில் உள்ள பிரபல ஐ நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் சனா கான். 32 வயதாகும் இவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த மியூசிக் டீச்சரான ஹேமந்த் படேல் என்பவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரத்தை அறிந்த சனாவின் குடும்பத்தினர், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் சனாவுக்காக மதம் மாறி ஹேமந்த் படேல் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி தனியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். முன்னதாக இருவரும் ராஜஸ்தானில் வாழ்ந்து வந்த நிலையில், வேலை காரணமாக ஐதராபாத்துக்கு மீண்டும் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சனா, தனது தாயுடன் இணைந்து விட்டார். எனவே அவரும் அடிக்கடி தனது மகள், பேரனை பார்க்க வீட்டுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும்பொழுது, ஹேமந்த்துக்கும், அவரிடம் பாடல் கற்றுக்கொள்ளும் சோபி கான் என்பவருக்கும் உறவு இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சனா, அவரை ரகசியமாக கண்காணித்துள்ளார். அப்போது அவரது மெசேஜ்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து கையும் களவுமாக தனது கணவரை பிடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து கேட்டபோது, இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஹேமந்தும், அவரது காதலியான சோபியும் சேர்ந்து சனாவை தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த சனா நேற்றைய முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள எண்ணியுள்ளார். எனவே அதன்படி முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு தனக்கு நேர்ந்ததை தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சனாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணவர் மீது வழக்கபதிந்து விசாரித்து வருகின்றனர்.

காதல் கணவர், வேறு ஒருவருடன் ரகசியமாக காதல் உறவு வைத்ததால் மனம் நொந்துபோன மனைவி முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: புதுமண தம்பதி உட்பட 5 பேர் கோடாரியால் கொடூர கொலை.. சகோதரன் வெறிச்செயல்.. - திருமணமாகி மறுநாளே அதிர்ச்சி!