India
சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரிகள்.. அதிகாலையில் நடந்த கொடூரம்.. டெல்லியை உலுக்கிய படுகொலையின் பின்னணி என்ன ?
டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் பிங்கி (30), ஜோதி (29) என்ற இரு சகோதரிகள் தங்கள் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சகோதரர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி அதனை திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த சகோதரரின் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கேட்ட அந்த இரு சகோதரிகளும் வெளியே வந்து சம்பவத்தை பார்த்துக்கொண்டுள்ளனர்.
அப்போது சண்டை முற்றிய நிலையில், பணத்தை வாங்க வந்தவர்கள் தங்கள் எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது அந்த குண்டு குறி தவறி அருகில் நின்றுகொண்டிருந்த சகோதரிகள் மேல் பாய்ந்துள்ளது. இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி சகோதரிகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதனைக் கண்ட துப்பாக்கியால் சுட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சகோதரிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பதை மோடியால் கூட தடுக்க முடியாது” : செல்வப்பெருந்தகை அதிரடி!
-
100% தேர்ச்சி - பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒர் மைல்கல் : தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா!
-
”பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” : வைகோ அறிக்கை !
-
“ரூ.65 கோடியில் புதிய கட்டடம்... உலக தரத்திற்கு உயரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை” : சிறப்புச் செய்தி!
-
சொந்த கட்சியை நம்பாமல் கட்சி தாவியவர்களை நம்பி தேர்தலில் களமிறங்கும் பா.ஜ.க!