India
சிறுவனை கொன்றதால் ஆத்திரம்.. முதலையை அடித்துக் கொலை செய்த கிராம மக்கள்!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்திற்குட்பட்ட ரகோபூர் தியாராவைச் சேர்ந்தவர் அங்கித் குமார். 14 வயது சிறுவனான இவருக்கு குடும்பத்தினர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து புதிய மோட்டார் சைக்கிளைப் பூஜை செய்வதற்காகக் கங்கை ஆற்றுக்கு அங்கித் குமார் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு கங்கை ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, முதலை ஒன்று குளித்துக் கொண்டிருந்த சிறுவன் அங்கித் குமாரைக் கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.ஆனால், சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆற்றில் இறங்கி முதலையைப் பிடித்து வெளியே இழுத்து வந்துள்ளனர். பின்னர் குச்சிகள் மற்றும் தடிகளால் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். முதலை இறந்த பிறகே தங்களது தாக்குதலை நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!