India
நீ எல்லாம் குதிரையில் ஊர்வலம் போலாமா?.. பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்: திருமணத்தில் நடந்த கொடூரம்!
டெல்லி அருகே உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ஜாதவ். இவருக்குக் கடந்த மே 4ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமகனை அவரது உறவினர்கள் குதிரையில் அமரவைத்து ஊர்வலமாகக் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் சோஹல்லா ஜாவத் பஸ்தி நகர் பகுதி அருகே வந்த போது சிலர் இவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்கள் 'பட்டியலினத்தைச் சேர்ந்த நீ எப்படி குதிரையில் ஊர்வலம் செல்லாம்' என கூறி மணமகனை குதிரையிலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.
பிறகு மணமகன் மற்றும் உடன் இருந்த உறவினர்களை இந்த கும்பல் தாக்கியுள்ளது. இவர்களைத் திருமண மண்டபம் வரை விரட்டிச் சென்றுள்ளனர். மேலும் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். இதனால் நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது.
இது குறித்து மணமகனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் யோகேஷ் தாக்கூர், ராகுல் குமார், சோனு தாக்கூர், குணால், சிஷிபால் உட்பட 20 பேரைக் கைது செய்துள்ளனர்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!