India
படகில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. உறவுக்காரரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பருந்தா என்ற கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் கடந்த மே 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள சித்தரகூட் என்ற இடத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இந்த ஊரில் சிறுமியின் குடும்பத்துக்கு முன்பே அறிமுகமான மனோஜ் யாதவ் என்ற இளைஞரின் வீடு இருந்துள்ளது. இரவு நேரமானதால் அந்த சிறுமியின் தாய் தனது மகளுடன் மனோஜ் யாதவ் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
சிறுது நேரம் ஆனதும் மனோஜ் யாதவ் சிறுமியை மட்டும் அங்கிருந்த மந்தாகினி நதிக்கரைக்கு தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் அந்த சிறுமியின் அத்துமீறிய நிலையில், இதனை அதே பகுதியில் இருந்த 5 சிறுவர்கள் கவனித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் வந்த சிறுவர்கள் மனோஜ் யாதவ் மற்றும் அந்த சிறுமி என இருவரையும் தாக்கி அங்கிருந்த படகில் ஏற்றியுள்ளனர். தொடர்ந்து படகை நதிக்குள் கொண்டு சென்ற இளைஞர்கள் அங்கு வைத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அதிகாலையில் இருவரையும் கரையில் விட்டுச்சென்று அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்று சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறிய நிலையில் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் மனோஜ் யாதவ் மற்றும் அந்த 5 சிறுவர்களை கைது செய்த போலிஸார் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!