India
4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் கைது.. பதிண்டா ராணுவ முகாம் வழக்கில் திடீர் திருப்பம்!
பஞ்சாப்பில் பதிண்டா ராணுவ முகாம் உள்ளது. இங்குக் கடந்த 12ம் தேதி அதிகாலை மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ராணுவ முகாமில் உள்ள உணவு சாப்பிடும் அறையில் நடந்துள்ளது.
மேலும் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளில் மற்றொரு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதோடு 28 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி ஒன்று மாயமாகி இருந்தது.
இதனால் பஞ்சாப் போலிஸார் தீவிரமாக இந்த வழக்கை விசாரணை செய்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சிவில் உடையிலிருந்ததும் தெரிந்தது. இந்நிலையில், அதே ராணுவ முகாமை சேர்ந்த தேசாய் மோகன் என்பவர்தான் 4 ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பஞ்சாப் போலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் எந்த மாதிரியான பிரச்சனை இவர்களுக்குள் இருந்தது என்பதை போலிஸார் தெரிவிக்கவில்லை. அதோடு மாயமான துப்பாக்கியையும் தேசாய் மோகன்தான் திருடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்