India
ராணுவ முகாமில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் நடந்த பயங்கரம்!
பஞ்சாப்பில் பதிண்டா ராணுவ முகாம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ராணுவ முகாமில் உள்ள உணவு சாப்பிடும் அறையில் நடந்துள்ளது. மேலும் உயிரிழந்த 4 பேர் யார் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சிவில் உடையில் இருந்ததாகவும் தெரியவருகிறது. இதனால் இந்த சம்பவத்தில் சில ராணுவ வீரர்கள் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதோடு இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என ராணுவ முகாமின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கி ஒன்று மாயமாகியுள்ளது. இதனால் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம் என பஞ்சாப் போலிஸார் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!