India
பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நாய்.. கர்நாடகாவில் நடந்த அவலம்!
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள மகப்பேறு வார்டு அருகே கடந்த சனிக்கிழமையன்று நாய் ஒன்று பிறந்த பெண் குழந்தையின் உடலை கவ்விக் கொண்டு சுற்றித்திரிந்து வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனையின் பாதுகாவலர்கள் நிர்வாகத்திடம் இது பற்றி தெரிவித்துள்ளனர். மேலும் நாயை விரட்டி குழந்தை உடலை மீட்டனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாய் கடித்து குழந்தை இறந்ததா? அல்லது அதற்கு முன்பே இறந்ததா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாததால் அது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு மருத்துவமனை நிர்வாகம் இறந்த குழந்தை இந்த மருத்துவமனையில் பிறக்கவில்லை என்றும் எங்கோ பிறந்த குழந்தையை இங்கு எடுத்து வந்து பெற்றோர் போட்டுச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அருகே உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பச்சிளம் குழந்தையை நாய் கவ்விக் கொண்டு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!