India

ஜார்கண்ட் :சகோதரரின் மனைவி, மகன்களை கொலை செய்த கொடூரன்.. சொத்துத்தகராறு காரணமாக நடந்த கொடுமை !

ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகர் அருகேயுள்ள லுங்காடு பத்ரா டோலி என்ற கிராமத்தில் பூனம் கண்டுல்னா (வயது 35) என்பவர் தனது பவன் மற்றும் அர்பித் ஆகிய இரண்டு மகன்களோடு வசித்து வந்துள்ளார். இவரின் கணவர் கடந்த 2017ல் மரணமடைந்த நிலையில், மகன்களோடு தனியே வசித்து வந்துள்ளார்.

இவரின் கணவரின் சகோதரர் அனோஸ் கந்துல்னா என்பவர் இவர்களின் வீட்டில் அருகே வசித்து வந்துள்ளார். பூனத்துக்கும் அனோஸ் கந்துல்னாவுக்கும் இடையே சொத்து தகராறும் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அனோஸ் கந்துல்னா ஆத்திரத்தில் தனது சகோதரர் மனைவி பூனத்தை தாக்கி கொலைசெய்துள்ளார். அப்போது இதனைக் கண்ட பூனத்தின் இரு மகன்களும் தாயை காப்பாற்ற வந்தபோது அவர்களையும் அனோஸ் கந்துல்னா கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் மூவரின் சடலத்தையும் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு மாட்டுச் சாணக் குழியில் புதைத்துள்ளார். சுமார் ஒரு வாரமாக பூனத்தை அக்கம் பக்கத்தினர் பார்க்காத நிலையில், அவரது உறவினரான விஸ்ராம் கண்டுலானா என்பவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே பூனம் காணாமல் போனது குறித்த விசாரணை கிராம பஞ்சாயத்தில் நடைபெற்றுள்ளது, அப்போது பலர் அனோஸ் கந்துல்னாவை குற்றம்சாட்டிய நிலையில், அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை பிடித்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைந்துள்ளனர்.

பின்னர் அவர் கூறிய தகவலின் அடிப்படையில் மாட்டுச் சாணக் குழியில் புதைத்த மூவரின் சடலத்தையும் போலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொலை செய்தவர் என்கவுண்டரில் கொலை.. போலிஸார் அதிரடி.. நடந்தது என்ன ?