India
இரவில் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபர்.. காலையில் மனைவி எழுப்பியபோது காத்திருந்த அதிர்ச்சி!
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் சத்தியமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மனைவியுடன் சுல்தான் பேட்டைக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் பரோட்டா மற்றும் பிரைட் ரைஸ் பார்சல் வாங்கி வந்துள்ளார். பிறகு இருவரும் வீட்டிற்கு வந்த ஹோட்டலில் வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இருவரும் படித்து தூங்கியுள்ளனர். இதையடுத்து விடியர்காலையில் சத்தியமூர்த்தியை அவரது மனைவி எழுப்பியுள்ளார். ஆனால் அவர் பேச்சு மூச்சின்றி அப்படியே இருந்துள்ளார். பிறகு உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பரோட்ட ப்ரைடு ரைஸ் சாப்பிட்டதால்தான் சத்தியமூர்த்தி உயிரிழந்தாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாகவே பரோட்டா, பிரியாணி, ப்ரைட் ரைஸ், ஷவர்மா சாப்பிட்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!