India
முன்னாள் காதலனை கொன்ற காதலி.. உடலை நெடுஞ்சாலையில் வீசிய கொடூரம்: விசாரணையில் போலிஸ் அதிர்ச்சி!
மேற்குவங்க மாநிலம் துர்காப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கோபால்மத் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்டநிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பிறகு அங்க சென்ற போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தது யார்? என விசாரணை செய்தபோது அது பினாசிடி நாகபள்ளி பகுதியைச் சேர்ந்த வினாஷ் ஜன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரின் கைகள் கட்டப்பட்டு இருந்ததால் அவரை யாரோ கொலை செய்து உள்ளனர் என்பதை போலிஸார் உறுதிசெய்தனர். பின்னர் விசாரணை நடத்தியபோது உயிரிழந்த அவினாஷ் ஜன், ஆப்ரீன் கட்டூன் என்ற பெண்ணை காதலித்து வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
அவினாஷ் ஜன் ஆப்ரீனை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை அப்ரீன் காதலிக்காமல் பிட்டு குமார் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி தெரிந்தும் அவினாஷ் ஜன், ஆப்ரினை காதலித்து வந்துள்ளார்.
இதனால் அவரை கொலை செய்ய ஆப்ரீன் முடிவு செய்துள்ளார். அதன்படி அவினாஷ் ஜன்னை வீட்டிற்க விருந்துக்கு அழைத்துள்ளார். அப்போது அவரை அதிகமாகக் குடிக்கவைத்துள்ளார். போதையிலிருந்த போது தனது காதலர் பிட்டு குமார் சிங்குடன் சேர்ந்து கொண்டு அடித்து கொலை செய்துள்ளார் ஆப்ரீன்.
பின்னர் அவரது கைகளைக் கட்டி இருசக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று அருகே இருந்த தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் சேர்ந்து வீசியது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காதலர்கள் இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்” : கழக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி: உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
-
🔴LIVE : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..
-
“பிளவுவாதம், பிரிவினைவாதம், வகுப்புவாதம் மட்டும்தாம் மோடிக்கு தெரியும்!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!