India

அதுக்காக நடந்த கொடூரம்.. ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்: கர்நாடகாவில் மருமகள் கைது - பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா பகுதியில் ஹடவள்ளி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் ஷம்பு பட் (70) - மாதேவி பட் (60) தம்பதி.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஸ்ரீதர் பட், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வித்யா என்ற பெண்ணுடன் திருமணமானது. அதேபோல் இரண்டாவது மகன் ராகவேந்திரா (34), இவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குசுமா திருமணமானது.

அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், கிட்னி பிரச்னை காரணமாக கடந்த 8 ஆடணுக்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகன் ஸ்ரீதர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து வித்யா தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது கணவர் பங்கு சொத்தை தனக்கு பிரித்து கொடுக்குமாறு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கேட்டுள்ளார்.

இதனால் அண்மையில் இவருக்கு ஒரு பங்கை ஷம்பு பட் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் கொடுத்த சொத்து வித்யாவிற்கு போதவில்லை என்று மீண்டும் கேட்டுள்ளார். அப்போது வித்யாவின் கணவர் குடும்பத்தார் அவருக்கு கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வித்யாவின் தாய் வீட்டார், அவர்களை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று வித்யாவின் தந்தை ஸ்ரீதர் மற்றும் சகோதரர் வினய் ஆகியோர் வித்யாவின் கணவரது குடும்பத்தாரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்களது உடல்களை வீட்டில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சடலங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கொலையை செய்தது வித்யா மற்றும் அவரது தந்தை, சகோதரன் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். சொத்துக்காக கணவரது குடும்பத்தாரை மனைவியின் குடும்பம் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த 6 வயது குழந்தை பள்ளிக்கு சென்றுள்ளது; மேலும் 3 வயது குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனால் அந்த இரண்டு குழந்தைகளும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஐதராபாத் பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ABVP படுதோல்வி..” : ஆத்திரத்தில் மாணவர்கள் மீது ABVP தாக்குதல் !