India
“தடை.. அதை உடை..” : 25 வயதில் சிவில் நீதிபதியாகும் தலித் பெண் - குவியும் பாராட்டு !
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி - வெங்கடலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் காயத்ரி கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.
இதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
மிக இளம்வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி பங்காருபேட்டை அருகே காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அவர் பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தை பிடித்து இருந்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!