India
“தடை.. அதை உடை..” : 25 வயதில் சிவில் நீதிபதியாகும் தலித் பெண் - குவியும் பாராட்டு !
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி - வெங்கடலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் காயத்ரி கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.
இதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
மிக இளம்வயதிலேயே சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள காயத்ரி பங்காருபேட்டை அருகே காரஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அவர் பல்கலைக்கழக அளவில் 4-வது இடத்தை பிடித்து இருந்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காயத்திரி கடின உழைப்பால் இன்று சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !