India
இவர்கள் ஸ்வெட்டர் அணியும் வரை நானும் ஸ்வெட்டர் அணிய மாட்டேன்: ராகுல் காந்தியின் முடிவிற்கு என்ன காரணம்?
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசத்தை அடுத்து மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் நடைபயணம் தொடங்கியதிலிருந்தே வெள்ளை நிற டி - ஷர்ட் மட்டுமே அணிந்து வருகிறார். இந்த டி- ஷர்ட்டுக்காக மட்டும் ராகுல் காந்தி பல கோடிகளைச் செலவு செய்ததாக பா.ஜ.க குற்றம் சாட்டினர். தற்போது மத்திய பிரதேசத்தில் கடும் குளிரலும் டி- ஷர்ட் மட்டுமே அணிந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடும் குளிரிலும் டி- ஷர்ட் மட்டுமே அணிந்து வருவதற்கான காரணம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரின் விளக்கத்தில், "நான் நடைபயணத்தை தொடங்கிய போது வெப்பமான வானிலையே இருந்து.
பல மாநிலங்களைக் கடந்து மத்திய பிரதேசத்திற்கு வந்தபோது குளிர் வந்துவிட்டது. இம்மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு மூன்று சிறுவர்களைப் பார்த்தேன். அவர்கள் இந்த கடும் குளிரில் ஸ்வெட்டர் கூட அணியாமல் நடுங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த சிறுவர்களே கடும் குளிரை தாங்கும்போது நம்மால் முடியாதா?. கடும் குளிர் என்னை வாட்டும் வரை நான் டி- ஷர்ட் மட்டுமே அணிவேன். அச்சிறுவர்களுக்கு எப்போது ஸ்வெட்டர் அணிந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறதோ அப்போதே நானும் ஸ்வெட்டர் அணிவேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!