India
‘பந்த்’ போராட்டத்திற்கு ஆதரவு தராததால் ஆத்திரம்.. பேருந்துகள், ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து அதிமுக அராஜகம்!
புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க, ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனிடையே ஆளும் அரசில் கூட்டணியில் இருந்து கொண்டே, ஒன்றிய பா.ஜ.க அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு பெறாமல், தங்களுடைய சுய நலனுக்காக இன்று பந்த் போராட்டத்தை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க அழைப்பு விடுத்திருந்த பந்த் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுக்காமல் வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டனர். அதேபோல் நேரு வீதி, பெரி மார்க்கெட் உள்ளிட்ட நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வினர் தமிழ்நாடு பேருந்து உள்ளிட்ட 5 பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அதேபோல் சாலையில் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனிடையே பேருந்து மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த அ.தி.மு.கவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில ஐ.ஜி சந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காலை முதல் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வந்த 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!