India
காளான் சமைத்துச் சாப்பிட்ட தந்தை,மகன் உயிரிழப்பு.. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்: கர்நாடகாவில் சோகம்!
கர்நாடக மாநிலம், தட்சினகன்னடா மாவட்டத்திற்குட்பட்ட புதுவெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் குருவா மேரா. இவரது மகன் ஒடியப்பா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, காட்டில் விளைந்திருந்த காளான்களை பறிந்து வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். பிறகு அந்த காளான்களை சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். பிறகு நேற்று வெளியே சென்றிருந்த குருவா மேராவின் மற்றொரு மகன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தந்தை மற்றும் சகோதரன் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்து போலிஸார் விசாரணை செய்தனர். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பாத்திரத்தில் காளான் சமைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதோடு காட்டிற்குச் சென்று காளான் பறிந்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
இதனால் காளான் சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா அல்லது உணவில் யாராவது விஷம் கலந்துள்ளார்களா? என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபிறகே உண்மை என்ன வென்று தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். காளான் சமைத்துச் சாப்பிட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!