India
கம்பளி விற்பதுபோல் கைவரிசை.. பெண்ணிடம் செயின் பறித்துவிட்டு தப்பியபோது விபத்தில் சிக்கிய கொள்ளையர்கள்!
கர்நாடக மாநிலம், தட்சினகன்டா மாவட்டம் தோள்பாடி கிராமத்தில், பொளலி அத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமிசுதீன், ரபீக் ஆகிய இருவர் காரில் கம்பளி விற்பனை செய்துள்ளனர். அப்போது, பெண் ஒருவர் இவர்களிடம் கம்பளி வாங்க வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். மேலும் அவர் காரில் இருந்த கம்பளிகளை சோதனை செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவர் மட்டும் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ரமிசுதீனும், ரபீக்கும் அந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண் உரத்த குரலில் கத்தவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். இதைப்பார்த்த இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர். பிறகு பொதுமக்களும் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
இவர்கள் பின்னால் வருவதைத் தெரிந்து கொண்டு காரை கணியூர் குறுக்கு சாலையில் ஓட்டிக் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து பொதுமக்கள் காயத்துடன் இருந்த கொள்ளையர்களைப் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சாதிய வன்கொடுமைக்கு சாட்டையடி : +2 தேர்வில் நாங்குநேரி மாணவர் சாதனை!
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !