India
காவல்நிலையம் புகுந்து இளம் பெண் கடத்தல்: 2 மணி நேரத்தில் விரட்டி பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் பிலாரா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காணாமல்போன பெண் காவல்நிலையத்திற்கு வந்து 'நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என்னை யாரும் கடத்தவில்லை' என போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அப்போது, மகள் காவல்நிலையம் வந்ததைத் தெரிந்து கொண்ட பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து போலிஸார் மற்றும் இளம் பெண்ணின் கணவர் ஆகியோர் அந்த காரை 2 மணி நேரம் விடாமல் பின்தொடர்ந்து விரட்டி சென்றுபிடித்தனர். பின்னர் போலிஸார் இளம் பெண்ணை மீட்டு அவரது கணவரிடமே ஒப்படைத்தனர். பின்னர் பெண்ணை கடத்திய உறவினர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!