India
ஆந்திரா : இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 13 வயது சிறுவன்.. கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சி !
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் 18 வயது இளம்பெண் ஆடுகளை மேய்த்துவந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த இளம்பெண் தந்து கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அந்த பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாக அந்த சிறுவன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுவனின் செயலை அந்த இளம்பெண் தடுக்க முயன்ற நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி அங்கிருந்த கல்லை எடுத்து அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சிறுவனை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!