India
உ.பி :கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. பெண்ணின் தங்கை வந்ததால் தப்பிய உயிர் !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி மாணவியின் தந்தையும் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். தாயும் ஆக்ராவுக்கு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். சகோதரியும் வெளியே சென்றுள்ளார்.
இந்த தருணத்தில் கல்லூரி மாணவி தனியே இருப்பதை அறிந்த புஷ்பேந்திரா என்ற அதே பகுதியை சேர்ந்த இளைஞர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டில் நுழைந்து தனியே இருந்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கி பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிகழ்வை வெளியே சொல்லிவிடுவார் என அஞ்சிய அந்த இளைஞர் கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து தூக்கில் ஏற்ற முயன்றுள்ளார். அப்போது திடீரென அந்த கல்லூரி மாணவியின் சகோதரி வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியேவீட்டுக்குள் பார்த்துள்ளார். அப்போது ஒருவர் தனது சகோதரியை தூக்கில் ஏற்ற முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டுள்ளார். இதனை எதிர்பாராத அந்த இளைஞர் கல்லூரி மாணவியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில்,சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!