India
ராஜஸ்தான்: தூங்கிக்கொண்டிருந்த கணவரை கொலை செய்த மனைவி.. 30 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக நடத்த பயங்கரம் !
ராஜஸ்தான் மாநிலத்தின் நாகெளர் மாவட்டத்திலுள்ள குந்தியா என்னும் கிராமத்தில் நேமாராம் மகத் (67), என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாரதா (47). இந்த தம்பதியினர் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சொத்துகுறித்த சண்டை எழுந்து வந்துள்ளது.தன்னுடைய கணவன் பெயரிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றக்கோரி சாரதா அடிக்கடி கணவரிடம் சண்டை போட்டுவந்துள்ளார்.
இதேபோன்ற சண்டை மீண்டும் வந்தநிலையில், மனைவி மேல் ஆத்திரமடைந்த கணவர் நேமாராம் தன் மனைவியின் காலை உடைத்துள்ளார். இது தொடர்பாக மனைவி தொடர்ந்த புகாரின் அடிப்படையில் வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.
இதைத் தொடர்ந்து சாரதா ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் ஒன்றை தனது கணவர் பெயரில் செய்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் நேமாராம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நேமாராம் மனைவியை கடுமையாக அடித்துள்ளார்.
பின்னர் போதையில் அங்கேயே நேமாராம் படுத்து துங்கியுள்ளார். அப்போது மனைவி சாரதா கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் பணத்துக்காக சாரதா கணவரை கொலை செய்ததாக நேமாராமின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்து போலிஸார் சாரதாவிடம் நடத்திய விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னுடைய கணவரைக் கொலைசெய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!