India
ராஜஸ்தான்: தூங்கிக்கொண்டிருந்த கணவரை கொலை செய்த மனைவி.. 30 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக நடத்த பயங்கரம் !
ராஜஸ்தான் மாநிலத்தின் நாகெளர் மாவட்டத்திலுள்ள குந்தியா என்னும் கிராமத்தில் நேமாராம் மகத் (67), என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாரதா (47). இந்த தம்பதியினர் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சொத்துகுறித்த சண்டை எழுந்து வந்துள்ளது.தன்னுடைய கணவன் பெயரிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றக்கோரி சாரதா அடிக்கடி கணவரிடம் சண்டை போட்டுவந்துள்ளார்.
இதேபோன்ற சண்டை மீண்டும் வந்தநிலையில், மனைவி மேல் ஆத்திரமடைந்த கணவர் நேமாராம் தன் மனைவியின் காலை உடைத்துள்ளார். இது தொடர்பாக மனைவி தொடர்ந்த புகாரின் அடிப்படையில் வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.
இதைத் தொடர்ந்து சாரதா ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் ஒன்றை தனது கணவர் பெயரில் செய்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் நேமாராம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நேமாராம் மனைவியை கடுமையாக அடித்துள்ளார்.
பின்னர் போதையில் அங்கேயே நேமாராம் படுத்து துங்கியுள்ளார். அப்போது மனைவி சாரதா கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் பணத்துக்காக சாரதா கணவரை கொலை செய்ததாக நேமாராமின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்து போலிஸார் சாரதாவிடம் நடத்திய விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னுடைய கணவரைக் கொலைசெய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !