India
நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த மகன்.. அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த துயரம்: உறவினர்கள் சோகம்!
மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார்.
அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நராப்ஜி மகனைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட நராப்ஜியும் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் உயிரிழந்ததை கேட்டு தந்தையும் மரணமடைந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!