India
இந்திய வான்எல்லையில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. துரிதமாக செயல்பட்ட இந்திய விமானப்படை !
சமீப காலமாக விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எதிர்பாராத அதிர்ச்சி, தாமதம் போன்ற செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் இந்திய வான் எல்லையில் நடைபெற்றுள்ளது.
ஈரானின் தெஹ்ரான் நகரில் இருந்து சீனாவில் உள்ள குவாங்சூ நகருக்கு ஈரான் நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் இந்திய வான்பரப்பில் பயணித்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் இந்திய அதிகாரிகளுக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் விமானப்படைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி பாதுகாப்பு விதிகளின்படி இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் பாதுகாப்பான தொலைவில் அந்த விமானத்தை பின்தொடர்ந்துள்ளது.
இந்திய விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் சார்பில் பாதுகாப்பு காரணத்துக்காக ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில விமான நிலையங்களில் தரையிறங்க பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால், குண்டு மிரட்டலை புறக்கணிக்குமாறு தெஹ்ரானில் இருந்து தகவல் கிடைத்ததால் ஈரான் விமானம் இந்தியாவில் தரை இறங்காமல் சீனாவை நோக்கி தொடர்ந்து சென்றது.
எனினும் ஈரான் விமானம் இந்திய எல்லையை கடந்து செல்லும் வரை இந்திய விமான படையால் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வான்வெளியில் ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!