India
சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவன்.. சக நண்பர்கள் வெறிச்செயல்.. டெல்லியில் அதிர்ச்சி !
டெல்லியில் 12 வயது சிறுவனை அவனது சக நண்பர்களே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அவரின் பிறப்புறுப்பில் கம்பியை திணித்து கொலை செய்யவும் முயன்றுள்ளனர். பின்னர் அந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "தலைநகர் டெல்லியில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை. 12 வயது சிறுவன் 4 பேரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருக்கும் மீதியுள்ள மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் "பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் கடன் வாங்கியதாகவும் சரியான நேரத்தில், அதை திருப்பி செலுத்தாததால் இப்படி செய்ததாகவும் சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளித்ததாக கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய இரண்டு சிறுவர்கள் மற்றும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!