India
பசு மாட்டை கடித்து குதறிய பிட்புல் நாய்.. மூன்று மாதத்தில் 4-வது சம்பவம்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
உத்தரபிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மகன் வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்து கொன்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதே மாதம் இறுதியில் பஞ்சாபில் பிட்புல் நாய் சிறுவனின் காதை கடித்து துப்பிய நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 11வயது சிறுவனை பூங்காவில் வைத்து பிட்புல் ரக நாய் கடித்து குதறியது. இந்த தாக்குதலில் அந்த சிறுவனுக்கு அவரது முகம் உட்பட உடல் முழுவதும் 150 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சர்சய்யா காட் பகுதியில் பசுவின் தாடையை பிட்புல் நாய் ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்ட பிட்புல் நாயின் உரிமையாளர் உள்ளிட்டோர் பசுவை காப்பாற்ற முயன்றனர்.
அங்கிருந்த 3 பேர் கட்டை உள்ளிட்ட பொருள்களால் நாயை தாக்கியும், நாயை இழுக்க பார்த்த நிலையிலும் கூட அந்த பிட்புல் நாய் தனது பிடியை விடவில்லை. பின்னர் இறுதியாக பிட்புல் நாய் தனது பிடியை விடுத்துள்ளது. இதனை மேல் மாடியில் இருந்து வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!