India
வயலில் வேலை செய்த பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 34 நாட்கள் தொடர் சித்திரவதை : பகீர் சம்பவம்!
ஹரியான மாநிலம் நூஹ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் (45) ஜூலை 27ம் தேதி வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் வழிகேட்பது போல் பேச்சுக்கொடுத்து கடத்தி உள்ளனர்.
பின்னர் காரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அருகே உள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, மூன்று பேரும் அந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது பெண்ணை வன்கொடுமை செய்து நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி ரூ.3 லட்சம் கொடுத்தால் பெண்ணை விட்டுவிடுவதாகவும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன பெண்ணின் பெற்றோர், செப்டம்பர் 1ம் தேதி ரூ.3 லட்சம் கொடுத்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!
-
உங்களின் Favourite Destination தமிழ்நாடு : உலக மக்களுக்கு முதலமைச்சர் சொன்ன வேண்டுகோள்!
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!