India
Hello உள்ளே வரலாமா.. அனுமதி கேட்டு பள்ளிக்குள் நுழைந்த முதலை: பீதியடைந்து ஓடிய மாணவர்கள்!
உத்தர பிரதேச மாநிலம், காசிம்பூர் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிராமம் கங்கை ஆற்றின் அருகே இருப்பதால் முதலைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.
இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கிராமத்தில் உள்ள பள்ளி வாளத்திற்குள் முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதைப்பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் மாணவர்கள் தடிகளைக் கொண்டு முதலைகளைத் தாக்கி வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டிவைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த வனத்துறையினர் முலையை மீட்டு மீண்டும் கங்கை ஆற்றுக்குள் விட்டனர். முதலைகள் கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!