India
தொழிற்சாலையில் தீ விபத்து.. மகனுக்கு பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் தந்தை - மகனுக்கு நேர்ந்த துயரம்!
ஆந்திரா மாநிலம், சித்தூரில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பொளுந்து விட்டு எரிந்து பரவியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்கள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் பாஸ்கர், அவரது மகன் டில்லிபாபு மற்றும் பாலாஜி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த டில்லிபாபுவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!