India
குழந்தை பிறக்காத சோகம்.. ஆத்திரத்தில் பக்கத்துவீட்டு பெண்ணை கொலை செய்த கணவர்..வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள போதி கிராமத்தில் வசிப்பவர் உமேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். ஆனால், இந்த சம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இந்த தம்பதியின் பக்கத்து வீட்டில் மற்றொரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். மேலும், இவரின் இந்த தம்பதியினர் அடிக்கடி பூஜை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி பூஜை செய்வதால்தான் தங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது என உமேஷ் அடிக்கடி கூறி வந்தார். அந்த தம்பதி தங்களுக்கு எதிராக பூஜை செய்வதாகவும் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போக காரணமும் இந்த மாந்திரிகம்தான் என கருதி வந்துள்ளார்.
இந்த நிலையில், தன் குடும்பத்தின் இந்த நிலைமைக்கு காரணமான பக்கத்து வீட்டுப் குடும்பத்தில் உள்ள கவுசிலியாவை கொலை செய்ய உமேஷ் முடிவெடுத்துள்ளார். அதன்படி வீட்டு பக்கத்தில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்த கவுசிலியாவை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவஇடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் தலைமறைவான உமேஷை தேடி கைது செய்தனர். அவரின் வாக்குமூலத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!