India
டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் என்ற பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சில மாதங்களாக அவர் அதற்கான பணத்தை செலுத்ததால் அவரது வீட்டில் உள்ள டிராக்டரை அந்நிறுவன அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது அந்த விவசாயியின் மகள் அவர்களிடம் சமாதானம் பேச முயன்றுள்ளார். இருப்பினும் அவர்கள் வாகனத்தை எடுத்ததால், அந்த பெண் அவர்களை தடுத்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணை கண்டுகொள்ளாத ஊழியர்கள், வேண்டுமென்றே அவரை டிராக்டரை கொண்டு இடித்துள்ளனர்.
இதில் கீழே விழுந்த அவர் மீது, அதே டிராக்டரை ஏற்றியுள்ளனர். இதில் வண்டியின் சக்கரத்தில் அந்த பெண் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்துள்ள அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செயப்பட்டுள்ளனர்.
கடனை திருப்பி செலுத்ததால் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவர் மீது டிராக்டர் ஏற்றி கொன்றுள்ள நிதி நிறுவனத்தின் செயல் அந்த பகுதியில் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!