India
பெற்றோர்களின் மூட நம்பிக்கை.. பாம்பு கடித்த சிறுமிகளை சாமியாரிடம் கூட்டிச் சென்றதால் நடந்த விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பாம்பு கடித்துள்ளது. இதனால் சிறுமிகள் இருவரும் அலறியடித்து மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அவர்களது பெற்றோர் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதில் அலிபூர் கிராமத்தில் உள்ள வாலா பாபா என்ற சாமியாரிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது, சாமியார் சிறுமிகளின் தலையில் அடித்து மந்திரம் ஓதியுள்ளார். மேலும் மூன்று மணி நேரம் சிறுமியை அங்கேயே வைத்துள்ளனர். ஆனால் சிறுமிகள் இருவரும் கண் முழிக்கவில்லை.
இதனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டுப் பெற்றோர்களும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெற்றோர்களின் மூட நம்பிக்கையால் பாம்பு கடித்த சிறுமியைச் சாமியாரிடம் அழைத்துச் சென்றதால் அவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !