India
மும்பையில் கடத்தப்பட்ட சிறுமி.. உத்தரபிரதேசத்தில் மீட்ட தந்தை.. சினிமா பாணியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் !
கடந்த 4-ம் தேதி மும்பை பகுதியில் இருந்த சிறுமி ஒருவர் தனது தந்தையிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இது குறித்து கூலி காவல்துறையில் புகார் அளித்தார்.
பின்னர் விசாரணை மேற்கொண்டதில் சூரத் பகுதியை சேர்ந்த ஷாஹித் கான் (வயது 24) என்ற இளைஞர் ஒருவர் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை உதவியோடு அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஷாஹித்தை கண்டறிந்து சிறுமியை தந்தை மீட்டார். மேலும் ஷாஹித் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர் சிறுமி வீட்டிற்கு அருகே வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமி தனியே வருவதை கண்ட ஷாஹித் அவரிடம் கடைக்கு கூட்டி செல்லுமாறு கேட்டுள்ளார். சிறுமியும் கூட்டி சென்றுள்ளார். ஆனால் அதற்குப் பதிலாக அவரை குர்லா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதற்காக முதலில் அவரை சூரத்திற்கு பேருந்தில் அழைத்து சென்ற அவர், அங்கிருந்து இரயிலில் சிறுமியை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் அவர் சிறுமியை பேருந்தில் கூட்டி செல்லும்போது குடிபோதையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஷாஹித் கான் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!