India
LIFT-ல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்.. குஜராத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி !
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலுள்ள சந்த்கேடா குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி வெளியில் சென்று விட்டு 11 வது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் சென்றார்.
அப்போது ஏற்கனவே லிப்டில் ஜகத்பூரைச் சேர்ந்த 62 வயதுடைய பானுபிரதாப் ராணா என்ற முதியவர் இருந்துள்ளார். அந்த சமயத்தில் லிப்டில் சிறுமி ஏறியதை கண்ட முதியவர் சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். பின்னர் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதியானது. இதனைத்தொடர்ந்து முதியவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக வெவ்வேறு மாநிலங்களில் இது போன்று லிப்டில் சென்ற போது ஒரு நபர் வைத்திருந்த நாய் மற்றொரு நபரை கடித்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது லிப்டில் முதியவர் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !