India
ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்ததால் மிரட்டல்..பாஜக அமைச்சரை கண்டித்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சி!
கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ஆனந்த் சிங். இவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக பொல்லப்பா என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் மீது புகார் அளித்த போலப்பா தனது குடும்பத்தினர் 8 பேரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வெளியே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர்கள் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தற்கொலை செய்யவிடாமல் தடுத்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து கூறிய போலப்பா , " அமைச்சர் செய்த ஆக்கிரமைப்பு தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பு ஆவணங்களுடன் போலீசில் புகார் அளித்தேன். சமீபத்தில், நகராட்சி கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். புகார் அளித்த பின்னர் கடந்த ஒரு வருடமாக எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன., அமைச்சர் அனுப்பிய 35 முதல் 40 குண்டர்கள் எனது வீட்டிற்குச் சென்று எனது குடும்பத்தினரை அச்சுறுத்தினர்" என்று கூறினார்.
போலப்பா அளித்த புகாரின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் மற்றும் 3 பேர் மீது, ஹோஸ்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்சி/எஸ்டி சட்டம் 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!